உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு

சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு

கடலுார் : கடலுாரில், சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு விழா நடக்கிறது.கடலுார் மஞ்சக்குப்பம் சூர்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நாராயணன்-உமாதேவி தம்பதியர் மகன் டாக்டர் ஆதிஷ்வர்குமரனுக்கும், சென்னை சிவக்குமார்-சரஸ்வதி தம்பதியர் மகள் டாக்டர் ஸ்ருதி பாக்கியலட்சுமிக்கும் கடந்த 24ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. கடலுார் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில், இன்று (30ம் தேதி) திருமண வரவேற்பு விழா மாலை 6:30 மணியளவில் நடக்கிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்துகிறார். அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி