மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கிரைண்டரில் மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.விருத்தாசலம் அடுத்த கார்குடல் புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி அமுதா, 45. இவர் நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.இதில், அவர் மயங்கி விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.