| ADDED : மார் 07, 2024 01:24 AM
மந்தாரக்குப்பம் : உலக மகளிர் தினத்தையொட்டி, விருத்தாச்சலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் தாயின் கருவறை வடிவமைப்பில் நின்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் ஜெயப்பிரியா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா கல்விக் குழும நிறுவனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழும இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்மையை பெருமைப்படுத்தும் வகையில், பிரம்மனி 2024 என்ற உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஜெயப்பிரியா குழும நிறுவனங்களின் டிரஸ்டி கஸ்தூரி ராஜகோபாலன், ஜெயப்பிரியா குழும இயக்குநர் அனிதா ஜெயசங்கர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) சாந்தி, வடக்குத்து பப்ளிக் பள்ளி செயலாளர் சிந்து, விருத்தாச்சலம் மகளிர் இன்ஸ்பெக்டர் கீதா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் சுதா, டாக்டர்கள் தமிழரசி, சமீம் நிஹார், சவுமியா பிரசன்னா, விவசாய பெண்மணி சந்திரா சூர்யா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஜெயப்பிரியா கல்வி குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராமன்குமாரமங்கலம், முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.