மண்டல வில் அம்பு போட்டி; திட்டக்குடி மாணவருக்கு தங்கம்
திட்டக்குடி; மண்டல அளவிலான வில் அம்பு போட்டியில் திட்டிக்குடி அரசு கல்லுாரி மாணவர் தங்கப் பதக்கம் வெற்று சாதனை படைத்துள்ளார். திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், 2ம் ஆண்டு மாணவர் சதீஷ். இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில், கடந்த 8ம்தேதி கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் வில் அம்பு போட்டி நடந்தது. இதில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திட்டக்குடி அரசு கல்லுாரி மாணவர் சதீஷ் தங்கம் வென்றார்.மாணவர் சதீைஷ, கல்லுாரி முதல்வர் ராஜசேகர், உடற்கல்வி இயக்குநர் இளவரசி, பேராசிரியர்கள் வாழ்த்தினர்.