உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்

தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்

அரூர்: அரூரில் பெய்த தொடர் மழையால், விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்த-மலை, கீரைப்பட்டி, எருமியாம்பட்டி, மாம்பட்டி, மற்றும் கம்-பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவ-லாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் உள்ளிட்டவைக-ளுக்கு களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்போக நெல் சாகுபடிக்கு நாற்-றங்கால் அமைக்க உழவுப்பணி மற்றும் மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றை மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ