உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுஞ்சாலைத்துறையினர் பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுஞ்சாலைத்துறையினர் பேரணி

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தை அருகே, பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தை, 4 ரோட்டில் துவங்கிய பேர-ணியை, உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, மாரண்ட-ஹள்ளி சாலை, ஓசூர் செல்லும் சாலை, காரிமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் பாலக்-கோட்டை அடைந்தது.இதில், தலைகவசம் உயிர்கவசம், ஹெல்மெட் அணிவீர் உயிரி-ழப்பை தடுப்பீர், சாலையில் மொபைல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்-டாதீர், மிதவேகம் மிகநன்று என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி, ஊர்வலமாக சென்றனர். உதவி பொறியாளர் ரஞ்சித், போக்குவரத்து எஸ்.ஐ., அந்தோணி உள்பட, 50க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள், பேரணியில் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை