உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மார்க்கெட்டில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை

மார்க்கெட்டில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலகோடு, காரிமங்கலம், கம்பை-நல்லுார், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்-ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள பூ மார்க்கெட்டில் விவசா-யிகள் விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்-ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பூக்களை வியாபாரிகள் வாங்கி செல்-கின்றனர். நேற்று புரட்டாசி, 3வது சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம், 10 டன் அளவிற்கு பூக்கள் விற்பனையான நிலையில் நேற்று, 3 டன் பூக்கள் என, 2 நாட்களில், 13 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை