உலக மண்வள தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மூக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக மண்வள தினத்தையொட்டி, மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.இதேபோல், பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி அரசு உயர்நி-லைப்பள்ளியில், உலக மண்வள தின நிகழ்ச்சி நடந்தது. பாலக்-கோடு வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) அர்ச்சுனன் துவக்கி வைத்து பேசினார். மண்வளத்தில் அங்கக பொருட்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தர்மபுரி நிலைய வேளாண்மை அலுவலர் தமிழ்பருதி, மண் பரி-சோதனை செய்வதன் முக்கியத்துவம், மண் மாதிரி சேகரிக்கும் வழிமுறை, மண்வளத்தை அதிகரிக்க வேண்டிய தொழில்நுட்-பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பாலக்கோடு வேளாண்மை அலுவலர் அனுசுயா, அட்மா திட்ட பணியாளர்கள் உள்பட விவ-சாயிகள் கலந்து கொண்டனர்.