மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05-May-2025
தர்மபுரி ;தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில், ஒகேனக்கல்லை சேர்ந்த ஆயில் மசாஜ் தொழிலாளர்கள், கலெக்டர் சதீஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கூறியுள்ளதாவது: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஆயில் மசாஜ் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு அரசு வழங்கும் லைசென்ஸ் இல்லாததால் போலீசார் எங்களை ஆயில் மசாஜ் தொழில் செய்ய அனுமதிப்பதில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலையுள்ளது. எனவே, எங்களது நிலையை கருத்தில் கொண்டு ஆயில் மசாஜ் தொழில் செய்ய லைசென்ஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.A
05-May-2025