உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.75 ஆயிரத்துக்கு மஞ்சள் விற்பனை

ரூ.75 ஆயிரத்துக்கு மஞ்சள் விற்பனை

அரூர்:அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில், 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகின.தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக, 19,550 ரூபாய், குறைந்தபட்சமாக, 9,009 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கிழங்கு மஞ்சள், ஒரு குவிண்டால் அதிகபட்சமாக, 17,109 ரூபாய், குறைந்தபட்சமாக, 9,009 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 10 மூட்டை மஞ்சள், 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை