உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்

பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்

தர்மபுரி: தர்மபுரி நகர், கோட்டை வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில், நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் கண்ணாடி அறை சேவை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை-களும் தொடர்ந்து, 10:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபமும் நடந்தது. மாலை கருடசேவையும், மாலையில் சுவாமி உள்புறப்பாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராஜா மற்றும் செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை