உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்

குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட வள்ளிமதுரையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மின்மோட்டார் பழுதடைந்ததால் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு, அரூர் - சித்தேரி சாலையில், வள்ளிமதுரை பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் ஒரு சில நாட்களில் மின்மோட்டார் சரி செய்யப்பட்டு, முறையாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 10:30 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி