தர்மபுரி: விஷ்ணு தீபத்தை முன்னிட்டு, தர்மபுரி பகு-தியில் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சதரி-சனம் செய்தனர்.கார்த்திகை தீபத் திருவிழாவின், 2வது நாளான நேற்று, விஷ்ணு தீப விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி நகரில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசு-தேவ பெருமாள் கோவில் வளாகத்தில், விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. முன்-னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆரா-தனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.அதேபோல், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு வழி-பாடுகள் நடந்தது. பின், விஷ்ணு தீபம் ஏற்றப்-பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது.இதே போல், தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்-கட்ரமண சுவாமி கோவில், வரதகுப்பம் வெங்-கட்ரமண சுவாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், மணியம்பாடி வெங்-கட்ரமண சுவாமி கோவில், அக்கமனஅள்ளி ஆதிமூல பெருமாள் கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்-றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று விஷ்ணு தீபம் ஏற்றப்-பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.