ரயில்வே ஸ்டேஷனில் அணிவகுத்த மாடுகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் மாடுகள் அணிவகுத்து சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில் தினமும் 100க்கு மேலான ரயில்கள் வட, தென் மாவட்டம், மாநிலங்களுக்கு செல்கின்றன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாலை திடீரென 10க்கு மேலான மாடுகள் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் அணிவகுத்து சென்றன. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயில்வே நிர்வாகத்தினர் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்த்தனர். அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் கால்நடைகள் வராமல் தடுக்க ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.