உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கோடையை குளிர்வித்த மழை

திண்டுக்கல்லில் கோடையை குளிர்வித்த மழை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சில நாட்களாக மாலை , இரவு நேரங்களில் பெய்து வரம் மழையால் கோடை வெயிலால் புலம்பிய மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.திண்டுக்கல்லில் 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை இருந்தது. இந்நிலையில் மே 4 ல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மறுநாள் முதலே கோடை மழை பெய்யத் தொடங்கி விட்டது. அன்று முதல் இதுவரை மதியத்திற்கு மேல் மேகமூட்டம் சூழ்ந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும் இரவு நேர மழை ஆறுதல் அளிக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 7 :00மணிக்கு 30 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்தாலும் 11:30 மணிக்கு மேல் லேசான மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த கோடை மழையால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நேற்று காலை கணக்குப்படி திண்டுக்கல் 16 மி.மீ., பழநி 4, நத்தம் 6, நிலக்கோட்டை 1, பிரையன்ட் பூங்கா 6.20 என மழை அளவு பதிவாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை