உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயிர் காப்பீடுக்கு அழைப்பு

பயிர் காப்பீடுக்கு அழைப்பு

திண்டுக்கல் : பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு , தக்காளி தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்து செய்யலாம் என தோட்டக்கலைதுறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு , தக்காளி தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்து செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.61,997, பிரிமியம் தொகையாக ரூ.3100, வெங்காய பயிருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.37,495, பிரிமியம் தொகை ரூ.1875, கத்தரி காப்பீட்டு தொகையாக ரூ.18,080, பிரிமியம் தொகை ரூ.904, வெண்டை காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.14,079, பிரிமியம் தொகை ரூ.704, உருளைக்கிழங்கிற்கு ரூ.40,212, பிரிமியம் தொகை ரூ.2011, தக்காளிக்கு ரூ.20,304, பிரிமியம் தொகை ரூ.1015 செலுத்தி விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்.வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப். 16, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு தக்காளிக்கு ஆக., 31ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்துடன் பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உடன் அருகிலுள்ள பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி