உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள்

விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள்

ஒட்டன்சத்திரம் : பூங்கா, பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்த படாமல் உள்ளதால் அவைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. பழநிகவுண்டன்புதுார் ரோடுப் பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருளில் மூழ்குகிறது.ஏ.பி.பி. நகர், பழநிகவுண்டன்புதுார், லட்சுமிபுரம், சண்முகவேல்புரம், அணைப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்து பழநிகவுண்டன் புதுார், அணைப்பட்டி செல்வதற்கு நேரிடையான வழி இல்லை. இதனால் பல கி.மீ. துாரம் பயணித்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு அவசியமாகிறது . பழநிகவுண்டன்புதுார் பகுதியில் செல்லும் ஓடையில் செடிகள் அகற்றப்பட்டு சிமென்ட் தரை தளத்துடன் பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓடை பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் செல்லும் இடத்தில் செடிகள் முளைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஓடையை சுற்றி போடப்பட்டுள்ள ரோடை சீரமைத்து கரைகளில் மண் கொட்ட வேண்டும். இந்த ரோட்டில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் டூவீலர்களில் செல்ல சிரமமாக உள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறும் ஓடை தூர்வாரப்பட்டு சிமென்ட் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களில் கழிவு நீர்

கே. மாணிக்கம், பா.ஜ., ஒ.பி.சி. அணி மாவட்டச் செயலாளர : ஏ.பி.பி. நகரில் பூங்கா,பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. லட்சுமிபுரம் பகுதியில் தெரு ரோடுகள் சேதம் அடைந்துள்ளது. பைபாஸ் போட்டு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏ.பி.பி நகர் விரிவாக்க பகுதிகளில் சாக்கடை இல்லாததால் காலியிடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

வாகனம் இயக்கத்தில் சிரமம்

ஒ.பி.காளிதாசன், சமூக ஆர்வலர்,ஏ.பி.பி.நகர்: பழநி கவுண்டன்புதுார் வழியாக செல்லும் ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் அருகில் செல்லும் ரோடு சீரமைக்கப்படாமல் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. பைபாஸ் ரோடு தொடங்கும் இடங்களில் தெரு விளக்குகள் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பைபாஸ் ரோட்டை ஆபத்தின்றி கடப்பதற்கு பாலம் தேவை. குப்பைகள் அள்ளுவதே கிடையாது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் பாதிக்கின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

சண்முகப்பிரியா, கவுன்சிலர் ( தி.மு.க.,): பழநி கவுண்டன் புதுார் ஓடையை துார்வார அமைச்சரிடம் கோரிக்கை வைத்தன் பயனாக லட்சுமிபுரத்திலிருந்து பழனிகவுண்டன்புதுார் வரை தடுப்புச் சுவர், தரைதளத்துடன் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பழனிக்கவுண்டன்புதுாரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள குளம் மறுகால் செல்லும் வழியில் பாலம் அமைக்கப்பட்டு விபத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏ.பி.பி . நகரில் பூங்கா,பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.பி.பி. நகர் மேற்கு விரிவாக்க பகுதியில் திட்ட மதிப்பீடு அனுமதி கிடைத்ததும் சாக்கடை அமைக்கப்படும். வார்டு பகுதியில் தேவையான இடங்களில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை