உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு தொல்லை:டிரைவருக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை:டிரைவருக்கு சிறை

திண்டுக்கல்:திண்டுக்கல் குளத்துார் ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்த டிரைவர் கனகபாண்டி. இவர் 2023ல் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கனகபாண்டியை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதன்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி கனகபாண்டிக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !