உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

வேடசந்துார் கொல்லம் பட்டறை அருகே காவிரி குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் பிடிப்பதால் வழிந்து ஓடும் தண்ணீர் ரோட்டோரம் செல்கிறது. - ஆர்.காவியா, வேடசந்துார்.ஏற்பாடு செய்யப்படும்தண்ணீர் பிடிக்கும்போது வழிந்து வெளியேறாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும்- மேகலா ,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார் .

பயன்பாடற்ற சுகாதார வளாகம்

ஒட்டன்சத்திரம் நகராட்சி 2வது வார்டு நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- வேலுச்சாமி,ஒட்டன்சத்திரம்.தீர்வு காணப்படும்நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.- அருள்மணி,கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.

சேதமான ரோடு

வேம்பார்பட்டியிலிருந்து மொட்டையகவுண்டன்பட்டி வரை செல்லும் ரோடு மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.- கெப்பையன்,மொட்டையாகவுண்டன்பட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்சேதமான ரோடை சீரமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. - கந்தசாமி, ஊராட்சி தலைவர்,வேம்பார்பட்டி.

-------------------------------------------- புதர்களால் அவதி

காணப்பாடி ராமநாதபுரத்தில் இருக்கும் பாறைக்குழியில் புதர்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் சலவை தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை அகற்ற வேண்டும்.-சந்திரசேகர், காணப்பாடி.நடவடிக்கை எடுக்கப்படும்ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.வீரமணி, ஊராட்சி செயலாளர், காணப்பாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி