கொடையில் பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்தனர். மழையில்லாததால் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வனச் சுற்றுலா தலங்கள்,வெள்ளி நீர்வீழ்ச்சி கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர்.