மேலும் செய்திகள்
சிறுமியை சில்மிஷம் செய்து வீடியோ
25-Jan-2025
திண்டுக்கல்:நத்தம் காந்திநகரை சேர்ந்தவர் தர்மராஜ்24. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வெளி மாவட்டத்திற்கு கடத்தி சென்றார். சிறுமியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகாரளிக்க போலீசார் சிறுமியை தேடினர். சில தினங்களுக்கு பின் சிறுமியை, போலீசார் மீட்டனர். அப்போது தர்மராஜ்,சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. நத்தம் போலீசார் போக்சோவில் வழக்குபதிந்து தர்மராஜை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவுநீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி தர்மராஜூக்கு,50 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண்,தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.
25-Jan-2025