உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செஸ் போட்டியில் சாதித்த அக் ஷயா மாணவி

செஸ் போட்டியில் சாதித்த அக் ஷயா மாணவி

ஒட்டன்சத்திரம்: மாநில அளவிலான திறந்தவெளி சதுரங்க போட்டி கரூர் கொங்கு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் செஸ் அகாடமி சார்பில் நடந்தது. ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி எஸ்.விருதிகா வர்ஷினி 10 வயதுக்கு உட்பட்டவருக்கான பிரிவில் 5.5 என்ற புள்ளி கணக்கில் ஆறு சுற்றுகளில் வெற்றி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியை தாளாளர் சுந்தராம்பாள், நிர்வாகி புருஷோத்தமன், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை