கார் எரிந்து சேதம்
சாமிநாதபுரம்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி 40. பழநி கணக்கம்பட்டிக்கு நேற்று காரில் வந்தார். அங்கிருந்து உடுமலைப்பேட்டைக்கு திரும்பிய போது தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் கார் திடீரென தீப்பிடித்தது. கார் முழுவதும் எரிந்தது மடத்துக்குளம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.