உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை பழக்கம் எஸ்.பி., வேண்டுகோள்

போதை பழக்கம் எஸ்.பி., வேண்டுகோள்

பழநி : ''போதை பழக்கத்தை தவிர்த்து ஒழுக்கத்துடன் பணியாற்றவேண்டும்,'' என, சந்திரசேகரன் எஸ்.பி., பேசினார்.பழநியில் ஊர்க்காவல் படை கட்டட திறப்புவிழா, நடந்தது. டி.எஸ். பி.,க்கள் பி.முருகேசன், கே.முருகேசன், வட்டாரத் தளபதி ஷர்மிளா, சரக தளபதி மணிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.சந்திரசேகரன் எஸ்.பி., பேசியதாவது: போதைப் பழக்கம் தவிர்த்து ஒழுக்கத்துடன், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களைப் பொறுத்தவரை, ஊர்க்காவல் படை, போலீசாரின் செயல்பாடுகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எனவே, ஊர்க்காவல் படையின் பணிகளுக்கேற்ப, நற்பெயரும், அவப்பெயரும் போலீஸ் துறைக்கு வந்து சேருகிறது. குடும்பத்தின் இன்ப, துன்பங்களை ஒதுக்கி, இன்முகத்துடன் பிறருக்கு சேவை செய்ய முன்வர வேண்டும், என்றார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி