உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டி.கோம்பையில் யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

 டி.கோம்பையில் யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

கன்னிவாடி: தருமத்துப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வாழை சாகுபடியை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கன்னிவாடி வனச்சரக பகுதிகளில், வாழை, எலுமிச்சை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. தண்ணீர், உணவு தேவைக்காக மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத் துவங்கியுள்ளன. சாகுபடி சேதப்படுத்துவது மட்டுமின்றி மலை கிராம விவசாயிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது. ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது தருமத்துப்பட்டி அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. டி.கோம்பை, சத்திரப்பட்டி பகுதியில் 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இரு நாட்களாக இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்த யானைகள், வாழை, தென்னை சாகுபடியை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று அதிகாலை முருகேசன், சிவக்குமார் ஆகியோரின் தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை