கோயிலில் கும்பாபிஷேகம்
சின்னாளபட்டி : முன்னிலைக்கோட்டையில் அங்காள ஈஸ்வரி, பாலகுருநாதசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, கனி பூஜை, மூலிகை, ருத்ர ஜெப வேள்வியுடன் 3 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து, கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.