வேன் மோதி ஒருவர் பலி
நத்தம்: சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கரந்தன் 35. நேற்று முன்தினம் மனைவி வனிதாவுடன் டூவீலரில் துவரங்குறிச்சி- மதுரை நெடுஞ்சாலையில் சென்றார். குமரபட்டி பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த மினிவேன் மோதியது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரந்தன் நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.