உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரிமா சங்கத்திடம் பழநி பூங்கா ஒப்படைப்பு

அரிமா சங்கத்திடம் பழநி பூங்கா ஒப்படைப்பு

பழநி: பழநி பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு பணிக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பழநி பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்லும் பஸ் ஸ்டாண்டில் உள்ள பூங்கா பராமரிப்பு இன்றி சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பூங்காவை பராமரிக்க அரிமா சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் அரிமா சங்கத்தினரிடம் பராமரிப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டது. இதில் செல்பி பாய்ன்ட், தேசியக்கொடி கம்பம், நீர் ஊற்று உள்ளிட்டவை அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை