உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி ரோப்கார் சேவை பாதிப்பு

 பழநி ரோப்கார் சேவை பாதிப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை நேற்று காற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர வின்ச், ரோப்கார் உள்ளன. ரோப்கார் மூலம் மூன்று நிமிடங்களில் கோயிலுக்கு செல்லலாம். நேற்று மதியம் 12:00 முதல் காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் படிப்பாதை, வின்ச் சேவையை பயன்படுத்தி கோயிலுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி