உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் பயணிகள் உற்சாகம்

கொடையில் பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.கொடைக்கானலில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து அவ்வப்போது தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை, சில்லிடும் காற்று வீசியது.குளு குளு நகரில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை,சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்தனர். தாண்டிக்குடி கீழ்மலையிலும் கனமழை கொட்டி தீர்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை