கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி
கொடைக்கானல்:கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் செப்.14 ல் யானை நடமாட்டம் இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிவுறுத்தலில் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது யானை இடம்பெயர்ந்ததால் மீண்டும் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதியளித்துள்ளது.