மாணவிக்கு பாராட்டு
பழநி: பிளஸ் 2 தேர்வில் பழநி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிறுவனர் டாக்டர் சந்திரலேகா தலைமை வகித்தார். பள்ளி செயலர் குப்புசாமி, டிரஸ்டிகள் பாலசுப்பிரமணியன், சிவகணபதி, கனகராஜ், செந்தில் குமார், வஞ்சியப்பன் கலந்து கொண்டனர்.