யோகா போட்டியில் சாதித்த பி.ஆர்.ஜி.,
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மேகவர்ணிகா, நகுலன் இலங்கை திருகோணமலையில் நடந்த சர்வதேச யோகாசன போட்டியில் பங்கேற்றனர். இது போல் பல நாடுகளில் இருந்து 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசன போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் பிரிவில் நகுலன் , மாணவிகள் பிரிவில் மேகவர்ணிகா முதல் பரிசு ,தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை பள்ளி செயலர் கிரிநாத், நிர்வாக அதிகாரி பவிதா, நிர்வாக குழு உறுப்பினர் ராஜ்மோகன் பாராட்டினர்.