சாதித்த அச்யுதா பள்ளி
திண்டுக்கல்: 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். 600க்கு 597 பெற்ற இவருக்கு பள்ளி நிர்வாக இயக்குநர் புருஷோத்தமன் நினைவு பரிசு வழங்கினார். பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன், முதல்வர் குணசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஹெர்பர்ட், சக்தி, லில்லி, லட்சுமி, சர்மிளா, பாண்டீஸ்வரி, ஆண்டனிதாஸ், பிரியங்கா, மேலாளர் கார்த்திக் வாழ்த்தினர்.