உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கோயில்களில் சிவராத்திரி பூஜை

 கோயில்களில் சிவராத்திரி பூஜை

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் கார்த்திகை சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது . திரவிய அபிஷேகங்களுடன் 4 கால பூஜைகள் நடந்தது . வாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மூலவர், ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, பாலதண்டாயுதபாணிக்கு திரவிய அபிஷேகம்,சிறப்பு மலர் அலங்காரம், தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், எஸ்.பாறைப்பட்டி மவுனகுரு சித்தர் பீடம், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலிலும் சிவராத்திரி அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை