என்.பி.ஆர்., ல் உறுதிமொழி ஏற்பு
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., செவிலியர், ஆராய்ச்சி நிறுவனத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான விளக்கு ஏற்றும் விழா, உறுதிமொழி ஏற்கும் விழா நடந்தது. சிறப்புவிருந்தினரான விக்னேஷ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லுாரி முதல்வர் டாக்டர் விஜயலட்சுமி பேசினார். செவிலியர் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி விருந்தினைரை கவுரவித்தார். மாணவர் ஷபான் வரவேற்றார். மாணவி ருக்ஸானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.சிறப்பு விருந்தினர் கல்லுாரி முதல்வர் இணைந்து விளக்கினை ஏற்றி வைத்தனர். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.மாணவி ஹிபாத்திமா நன்றி கூறினார்.