டயர் பஞ்சர்; மாற்று டயர் இல்லாமல் அவதி
பட்டிவீரன்பட்டி: டயர் பஞ்சரான டவுன் பஸ்சால் பயணிகள் அவதிப்பட்டனர். நேற்று காலை 10:30 மணி அளவில் வத்தலக்குண்டில் இருந்து செம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல 40 பயணிகள் பயணம் செய்தனர். பட்டிவீரன்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்றது. மாற்று டயர் இல்லாததால், பஸ்ஸில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்களில் ஏறி ஊர்களுக்கு சென்றனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு தரமான பஸ்களை வத்தலக்குண்டு பணிமனையில் இருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.