தடுப்பு இல்லா கிணறுகளால் தடுமாற்றம்; விபரீதம் முன் விழிக்கலாமே
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர கிணறுகள் அதிகளவில் உள்ளன. இவைகள் பெரும்பாலும் தடுப்புகள் இல்லாமல் காட்சியளிக்கின்றன.வேகமாக வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க சற்று ஒதுங்கினால் கிணறுகளில் விழும் நிலை உள்ளது.கிராம ரோடுகள் முதல் நான்கு வழிச்சாலைகளிலும் விபரீதம் நடந்தால் விழிக்கும் போலீஸ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் அதன்பின் எதையும் கண்டு கொள்வதில்லை. இனியாவது இது போன்ற ஆபத்து கிணறுகளை கண்டறிந்து தடுப்புகள் ஏற்படுத்த முன் வர வேண்டும்.