உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை

கொடை யில் தொடரும் நெரிசல் சீர்திருத்த நடவடிக்கையில் துரிதம் தேவை

கொடைக்கானல் : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தொடர் விடுமுறையடுத்து ஏராளமான பயணிகள் கொடைக்கானல் வருகை தந்தனர். ஏரிச்சாலை சந்திப்பு பாம்பார்புரம் சந்திப்பு, கலையரங்கம், செவன் ரோடு, மூஞ்சிக்கல் சந்திப்பு, ஏரிச்சாலை செவன் டீ, வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் பணியிலிருந்தும் நெரிசல் இரவு வரை நீடித்தது.கலெக்டர் சரவணன் மாலையில் தற்காலிக பார்க்கிங், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை