உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்

திண்டுக்கல்லில் வடமதுரை பெருமாள்

வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகர் பகுதியில் எழுந்தருள்வது வழக்கம். 104வது ஆண்டு திருவிழாவிற்காக நேற்று காலை வடமதுரை கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் நேற்றிரவு முள்ளிப்பாடியில் தங்கினார். இன்று காலை முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்த பின்னர் ஏப்.18 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் புஷ்ப விமானம், குதிரை, கருட, புஷ்ப பல்லக்குகளில் எழுந்தருள்கிறார். ஏப்.19ல் மீண்டும் வடமதுரை கோயிலுக்கு திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ