மேலும் செய்திகள்
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
30-Dec-2024
கைப்பிடிச்சுவர் இல்லா பாலம்வத்தலக்குண்டு அருகே உசிலம்பட்டி ரோட்டில் பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் உடைந்து விட்டன. இதனால் வாகனங்கள் தவறி ஆற்றுக்குள் கவிழும் அபாயம் உள்ளது. இதை புதுப்பிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜான், சின்னுப்பட்டி..............---------சேதமான ரோடுஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -காளிசாமி ஒட்டன்சத்திரம்.........-------------------ஊற்று போல் கசிவு நீர்வடமதுரை வெள்ளமடை பகுதியில் குடிநீர் பைப் லைன் உடைந்து கசிவு நீர் ஊற்று போல் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் கடந்து செல்வதற்கு சிரமமப்படுகின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். --முருகன், வடமதுரை...............குப்பையால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் பூ மார்க்கெட் நுழைவு பகுதியில் குப்பை மலை போல் குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதால் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி, திண்டுக்கல்.................----------சேதமான மின் காம்பம்நத்தம் அருகே சிறுகுடி எம்.ஜி.ஆர்., நகரில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மின்கம்பத்தில் மேல் பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மின் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. கம்பத்தை மாற்றவேண்டும். வீரா, நத்தம்...............----------மழைநீருடன் கழிவு நீர்திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறுகிறது. அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் கழிநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். செந்தில், திண்டுக்கல்............-----------அச்சத்தில் அலுவலர்கள்திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் நாய்களால் அலுவலர்கள் ,பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் கடிக்கபாய்வதால் பலரும் அலறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். சந்திரசேகர், திண்டுக்கல்......................--------------
30-Dec-2024