உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காஞ்சிக்கோவிலில் தேர்த்திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்ச்சை

காஞ்சிக்கோவிலில் தேர்த்திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்ச்சை

பெருந்துறை: காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவியம்மன் திருவிழா கடந்த 7 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. நேற்று அதிகாலை அக்னிக் குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்ச்சைக்கடனுக்காக குண்டம் இறங்கி, இறைவனை வழிப்பட்டனர். நேற்று காலை 11 மணியளவில் அக்னி அபிஷேகம், இரவு 10 மணியளவில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசீதேவியம்மன் ரதம் ஏறுதல் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (15ம் தேதி) மாலை 4.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (16ம் தேதி) மாலை 4 மணிக்கு திருத்தேர் மற்றும் ரதங்கள் நிலை வந்து சேருதல், இரவு 10 மணிக்கு முத்துப்பல்லக்கில் ஸ்ரீசீதேவியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருதல், 17ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் திருவிழா நிறைவு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கொழந்தாயாள், செயல் அலுவலர் ஈஸ்வரி, காஞ்சிக்கோவில் செம்பொன்குலம், முளசி கண்ணகுலம், கண்ணகுலம், முதன்மைக் கவுண்டர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ