உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ள-ளவு கொண்டது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை- தடப்-பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு கடந்த ஜூலை, 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்கு, 1,250 கன அடி வரை தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அரக்கன் கோட்டை - தடப்பள்ளி பாச-னத்திற்கு, 900 கன அடி நீர், குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்-படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 2,548 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்-மட்டம், 95.24 அடி. நீர் இருப்பு, 25.1 டி.எம்.சி., யாக இருந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ