உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி ௨ பேர் பலி

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி ௨ பேர் பலி

பவானி: ஈரோடு, இடையன்காட்டுவலசை சேர்ந்தவர் இப்ராஹிம், 40; வேன் டிரைவர். சமையல் எண்ணெய் பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில், அந்தியூர் சென்றார். அங்கிருந்து லோடு மேன் மணியுடன் நேற்றிரவு திரும்பினர். பவானி அருகே தாளப்பை-யனுார் அருகே சென்றபோது, இரவு, 9:45 மணியளவில் பவா-னியில் இருந்து பல்சர் பைக்கில் அதிவேகமாக சென்ற இருவர், முன்னால் சென்ற காரை முந்த முயன்றனர். அப்போது எதிர்பா-ராத விதமாக சரக்கு வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதினர். இதில் பைக் நொறுங்கியது. பைக்கில் பயணித்த இரு-வரும் சம்பவ இடத்தில் பலியாகினர். சரக்கு வாகன டிரைவர் இப்ராஹிமுக்கு வலது கால் முறிந்தது. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பவானி போலீசார் வாலிபர்-களின் உடலை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான வாலிபர்கள் இருவரும், பர்கூர் மலையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை