உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடை மீறி ஆர்ப்பாட்டம்: இ.முன்னணியினர் கைது

தடை மீறி ஆர்ப்பாட்டம்: இ.முன்னணியினர் கைது

தாராபுரம் : கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில், தாராபுரம் பழைய நக-ராட்சி அலுவலகம் அருகே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அனுமதி தராத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்-பிரமணி, கதிரேசன் உள்பட, 60க்கும் மேற்பட்-டோரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற, ௫௦க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை