உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலில், ௧00 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு தாலுகா அலுவலக நுழைவுவாயில், தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட், அவரை, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்தி, 'தேர்தல் நாள் 19.-4.-2024' மற்றும் 100 சதவீதம் என நேற்று எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் முன் நின்று தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள், 100 சதவீத ஓட்டுபதிவை உறுதி செய்ய வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ