உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 3௦ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

வரும் 3௦ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படுகிறது. இதன்படி 'ஆஸ்-பிரிங்-(ஆர்வலர்)' என வகைப்படுத்தப்பட்ட, 28 பஞ்.,களை 'உயரும்' நிலைக்கும், 119 பஞ்.,களை 'திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாதிரி (ஓ.டி.எப்.,)' நிலைக்கு கொண்டு செல்-லவும், குடிநீர் இணைப்பில் தன்னிறைவு நிலை அடைந்த, 45 பஞ்.,களை 'குடிநீரில் தன்னிறைவு' பெற்ற பஞ்.,களாகவும் தீர்-மானம் நிறைவேற்றுவதற்காக கிராமசபை கூட்டம் நடக்க உள்-ளது.வரும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கும் இக்கிராம-சபை கூட்டத்தை கண்காணிக்க வட்டார மற்றும் பஞ்சாயத்து அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமசபை நடக்கும் இடம், நேரம் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம், மக்க-ளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்