மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 318 மனுக்கள் ஏற்பு
23-Sep-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் ஏற்கப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இலவச சலவை பெட்டிகள், 10 பயனாளிகளுக்கும், ஐந்து பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் சொந்த நிலத்தில் வீடு கட்டி கொள்ள தலா, 4 லட்சம் ரூபாய் நிதி ஆணை என, 29 பயனாளிகளுக்கு, 34.11 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான் உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Sep-2025