உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு திருமணம்

அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு திருமணம்

அறநிலையத்துறை சார்பில்27 ஜோடிகளுக்கு திருமணம்ஈரோடு, அக். 22-ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட கோவில்களின் சார்பாக, திண்டலில் உள்ள தனியார் பள்ளியில், 27 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். எம்.பி., பிரகாஷ், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். ஜோடிகளுக்கு தலா 4 கிராம் தங்க மாங்கல்யம், 30க்கும் மேற்பட்ட பொருட்களுடன், 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கப்பட்டது. புதுமண தம்பதிகளுக்கு விருந்தும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை