உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டில் 5 பவுன் திருட்டு

கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டில் 5 பவுன் திருட்டு

பவானி, ஆப்பக்கூடல் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வள்ளி, 45; மகன் மற்றும் மருமகளுடன், திருச்செந்துார் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்டி திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த மருமகளின் நான்கு பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் கம்மல் திருட்டு போனது தெரிய வந்தது. வள்ளி புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி